மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
2022-05-19@ 20:56:56

மானூர்: மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்த வெறிநாய் கூட்டம் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியதில் 34 ஆடுகள் பலியாகின.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் சுப்பையாபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரியப்பன் (41). விவசாயியான இவர், ஊருக்கு தெற்கே கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்றிரவு 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 10 குட்டி ஆடுகள் மற்றும் நான்கைந்து கோழிகள் ஆகியவை பண்ணையில் இருந்தன.
இந்நிலையில் நள்ளிரவில் பண்ணைக்குள் புகுந்த வெறிநாய் கூட்டம் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் 34 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. அதன்பிறகு வெறிநாய் கூட்டம் அங்கிருந்து சென்று விட்டது. இன்று காலை பண்ணைக்கு வந்த மாரியப்பன், ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், மானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நாய்களால் கடித்து குதறப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ.3.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாஜி எம்எல்ஏவின் மகனுக்கு போலீஸ் வலை
கரூர் திருமாநிலையூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தனிவிமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வர் முக.ஸ்டாலின்
சாத்தான்குளம் அருகே விஷம் வைத்து 20 கோழிகள் சாகடிப்பு
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருவேங்கடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராஜபாளையம் தொகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காட்பாடியில் சீரமைப்பு பணி முடிந்தது ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்