மருத்துவ பயன்பாட்டுக்கு மாநகராட்சி நிலம் : சென்னை மேயர் பிரியா தகவல்
2022-05-19@ 17:55:29

தாம்பரம்: தாம்பரம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கு மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்தார். தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தின் சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை நேற்று காலை சென்னை மாநகர மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தாம்பரம் மாநகர ஆணையர் இளங்கோவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி நிலத்தில் செய்ய வேண்டிய திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாநகர மேயர் பிரியா ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறுகையில், தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் கடந்த 1946ம் ஆண்டு தனது 30 ஏக்கர் நிலத்தை அழகப்ப செட்டியார் என்பவர் சென்னை மாநகராட்சிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்த நிலத்தை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். இந்நிலத்தில் அப்போது தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. தற்போது அங்கு தொழுநோய் மருத்துவமனை பயன்பாட்டில் இல்லை. எனவே, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை தொழுநோய் மருத்துவ பயன்பாட்டுக்கு மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..!
பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை : மோடி மீது ப.சிதம்பரம் அட்டாக்
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் குவித்து வைக்கப்படும் கட்டிட மற்றும் மரக்கழிவுகள்: கொசு உற்பத்தி அதிகரிப்பு
செங்கல்பட்டு அருகே முகம் சிதைத்து வாலிபர் கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!