நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை
2022-05-19@ 10:42:53

நெல்லை: நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் கடந்த 14-ம் தேதி இரவில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பேசும் பொருளாக தமிழகம் முழுவதும் பரவியது. கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மீட்கப்பட்டு ஒருவரை மட்டும் தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து இந்த பகுதிகளில் முகாமிட்டு தேடி வருகின்றனர். 6-வது நபர் அடையாளம் காணப்பட்டு மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் போலீசார் குவாரி உரிமையாளர் செல்வராஜின் அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!