பெற்றோர் குடியுரிமையை துறந்தாலும் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை பெற உரிமை உண்டு : ஐகோர்ட் அதிரடி
2022-05-19@ 09:12:04

சென்னை : பெற்றோர் குடியுரிமையை துறந்தாலும் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை பெற உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு இந்திய குடியுரிமையை துறந்து சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றபோது, தாயின் வயிற்றில் 7.5 மாத சிசுவாக இருந்த பிரணவ் சீனிவாசன் என்பவர் மேஜர் ஆன பின்னர் 2017ம் ஆண்டு இந்திய குடியுரிமை கோரி சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் பெற்றோர் இந்திய குடியுரிமையை இழந்துவிட்டதால் பிரணவ் இந்திய குடியுரிமையை துறந்துவிட்டதாக அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் விண்ணப்பத்தை நிராகரித்தது. இதனை எதிர்த்து பிரணவ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்தாலும் அந்த காலக்கட்டத்தில் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு உரிமை உள்ளது எனக் கூறி அவருக்கு குடியுரிமை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை
தற்காலிக ஆசிரியர் பணி நியமன முறையை கைவிட வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை
ஓடிடியில் வெளியாகிறது விக்ரம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;