செலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்
2022-05-19@ 02:19:47

மதுரை: மதுரையில், மாதர் சங்க தலைவி, கணவருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை, செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (64). இவரது மனைவி ராஜேஸ்வரி (62). இவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவராக உள்ளார். இவர்களது மகன் அழகர்சாமிக்கு திருமணமாகி குடும்பத்துடன் மேலப் பொன்னகரம் 2வது தெருவிவில் வசிக்கிறார். கந்தசாமி மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். தம்பதிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வறுமையும் வாட்டியது.
இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்த தம்பதியர், கடந்த 16ம் தேதி மகன் வீட்டிற்கு சென்று குடும்ப செலவிற்கு பணம் கேட்டுள்ளனர். அதில் மகனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கையோடு வாங்கிச் சென்ற விஷத்தை இருவரும் குடித்து விட்டு அருகில் உள்ள விநாயகர் கோயிலில் மயங்கி கிடந்தனர். தகவலறிந்து கரிமேடு போலீசார், இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று காலை இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!