திண்டிவனம் நோக்கி செல்லும் பஸ்கள் மாமண்டூர் மோட்டலில் நிற்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு
2022-05-19@ 01:19:35

சென்னை: சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மாமண்டூர் மோட்டலில் நின்று செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொது மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாமண்டூர் மோட்டலில் திண்டிவனம் மார்க்கமாக செல்லும் போக்குவரத்து கழக பஸ்கள், உணவு மற்றும் சிற்றுண்டிக்காக நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து மண்டல பொது மேலாளர்கள், தங்கள் மண்டலங்களை சார்ந்த சென்னையில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக செல்லும் பஸ்களை மாமண்டூர் மோட்டலில் உணவு மற்றும் சிற்றுண்டிக்காக நின்று செல்ல சம்பந்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தக்க நெறிமுளை வழங்க வேண்டும்.
போக்குவரத்துக்கழக பஸ் மாமண்டூர் மோட்டலில் தினமும் நின்று செல்வதை உறுதி செய்ய, மேல்மருவத்தூர் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாமண்டூர் மோட்டலில் நின்று செல்ல வேண்டும் என்று வழி விவர பட்டியலில் சீல் வைத்து அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
எடப்பாடி அணி ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தயாராகும் நிலையில் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்? தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கூடுதல் கமிஷனர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் பேரணி
தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம்அணிய வேண்டும்; மீறினால் அபராதம் விதிக்கப்படும்.! தமிழக அரசு அறிவிப்பு
புதுவண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் கதவு மூடியதால் 3 பேர் காயம்; பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு
வாலாஜாபாத் ஒன்றியத்தில் 764 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
மாநகராட்சியின் பறக்கும் படை குழுவினரால் ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!