இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர் விடுதலை
2022-05-19@ 00:17:43

சென்னை: இலங்கை சிறையில் இருந்து 4 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச்சேர்ந்த வேலாயுதம், சதீஷ், ராஜகனி, விசாகர். இந்த 4 மீனவர்களும் மார்ச் மாதம் இந்திய எல்லையில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் இருக்கும் 4 தமிழக மீனவர்களை மீட்டு தரும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மீனவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதி வலியுறுத்தினார். இந்நிலையில், கடந்த மாதம் 4 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், 4 தமிழக மீனவர்களும் கொழும்பு நகரிலிருந்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஏர்இந்தியா விமானத்தில் சென்னைக்கு வந்தனர்.
மேலும் செய்திகள்
எடப்பாடி அணி ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தயாராகும் நிலையில் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்? தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கூடுதல் கமிஷனர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் பேரணி
தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம்அணிய வேண்டும்; மீறினால் அபராதம் விதிக்கப்படும்.! தமிழக அரசு அறிவிப்பு
புதுவண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் கதவு மூடியதால் 3 பேர் காயம்; பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு
வாலாஜாபாத் ஒன்றியத்தில் 764 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
மாநகராட்சியின் பறக்கும் படை குழுவினரால் ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!