மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
2022-05-19@ 00:17:40

சென்னை: ‘மாநில அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே ஆளுநர் வேலை. அதில் காலதாமதப்படுத்தியது அரசியலமைப்புக்கு எதிரானது’ என பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய விஷயங்கள்: பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறானது. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மாநில அரசு ஒரு முடிவெடுத்து, அதை ஆளுநருக்கு அனுப்பிவைத்தால் அதற்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநரின் வேலை. அதில் தன்னுடைய சொந்தக் கருத்துகளையோ அல்லது அவர் தனது சொந்த முடிவையோ எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது.
கருணை மனுக்கள், சட்டப்பேரவை தீர்மானத்தின் மீதான முடிவுகளை ஆளுநர்கள் எடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், ஆளுநர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இரண்டரை ஆண்டுகள் கால தாமதப்படுத்தியது தவறு. இது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதாகும். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை. மாநில அரசின் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர்தான். இனி யாரும் அதை மறுக்க முடியாது. ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. ஒரு மாநிலத்தின் ஆளுநரே என்றாலும், சட்டவிதிகளுக்கு பொருந்தக்கூடியவராகவே இருப்பதே அடிப்படை அம்சம்.
161வது அரசியல் சாசன விதியின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் அனைத்து சட்டவிதிகளையும் மீறியிருப்பது தெளிவாகத் தெரியவருகிறது. மேலும், மாநில அமைச்சரவை தீர்மானத்தில் தலையிட ஒன்றிய அரசுக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம், மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும், மேலும் உறுதியாகி இருக்கிறது. இது, தமிழ்நாடு அரசால் இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் இந்த தீர்ப்பு ஆளுநரின் அதிகார வரம்பை நிர்ணயிக்கக் கூடிய வரலாற்று சிறப்புமிக்க உத்தரவாக கருதப்படுகிறது.
Tags:
State Government Resolution No one has the power the rule of law the governor the Supreme Court condemned மாநில அரசின் தீர்மானம் யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதி ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்மேலும் செய்திகள்
கரூருக்கு 2ம் தேதி முதல்வர் வருகை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்
சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் டயர், உதிரி பாகங்கள் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!