உலகளவில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்!: இந்தியாவுக்கு அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள்
2022-05-18@ 15:51:33

நியூயார்க்: கோதுமைக்கான ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போரால் உலக நாடுகளுக்கு இடையே கோதுமை உள்ளிட்ட தானிய வினியோக சங்கிலி பாதித்துள்ளது. இதனால் உலகளவில் கோதுமை விலை அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக இந்தியாவில் கோதுமையின் விலை உயர்வு, பதுக்கலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 13ம் தேதி முதல் கோதுமை ஏற்றுமதிக்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 2021-22ம் நிதி ஆண்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்தியா 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய எண்ணி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் ெதரிவித்தன.
அதையடுத்து ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற இடைக்கால ஏற்பாடாக, அவற்றுக்கு மட்டும் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில் கோதுமை ஏற்றுமதி மீது பிறப்பித்துள்ள தடையை, இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.
இதுகுறித்து உலகளாவிய உணவு பாதுகாப்பு கவனிக்கும் ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதி லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘உக்ரைன் மீதான ரஷ்ய போரால் உலகளவில் உணவு பாதுகாப்பின்மை பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால் உணவுப்பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்பதால் கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா, மற்ற நாடுகளால் எழுப்பப்படும் கவலைகளை அவர்கள் (இந்தியா) கேட்கிறபோது, அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றார்.
மேலும் செய்திகள்
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவைச் சந்திக்கும்: உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை..!
கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டது அமெரிக்காவுக்கு மோசமான நாள்: ஜோ பைடன் கருத்து..!
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 54.82 கோடி பேருக்கு தொற்று உறுதி!!
ரஷ்யாவின் சரக்கு விமானம் விபத்து: 4 பேர் பலி
சுகாதார அதிகாரிகள் பரபரப்பு குற்றச்சாட்டு: இங்கி.யில் போலியோ வைரஸ் பரவக் காரணம் பாகிஸ்தான்
சண்டை போட ஆயுதங்கள் இருக்கு... உயிர் கொடுக்கதான் எதுவுமில்லை; சாப தேசம்: பூகம்பம் இடிபாடுகளை கையால் அகற்றி சொந்தங்களை மீட்கும் ஆப்கான் மக்கள்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!