ஜவுளி தொழிலாளர் நலன்காக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
2022-05-17@ 16:39:41

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: மே முதல் வாரத்தில் ஒரு கிலோ நூலின் விலை ரூ.441. தற்போது ரூ.481. நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழிலுக்கு ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து பருத்தி, நூல் விலையானது மிக அதிக அளவில் உயர்த்தப்படுவதால் ஜவுளித் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே ஒன்றிய அரசு, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் புதிய திருப்பம்: 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்..!
கரூருக்கு 2ம் தேதி முதல்வர் வருகை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்
சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!