பெரம்பலூர் அருகே சினிமா டைரக்டருக்கு கத்தி வெட்டு: 6 மர்ம நபர்களுக்கு வலை
2022-05-17@ 14:26:09

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி அரணாரை அண்ணா தெருவை சேர்ந்த செல்வராஜ் (எ) அப்துல் ரகுமான் (39). இவர் 10 ஆண்டுகளுக்கு முன் தமிழ்தேசம் என்ற படத்தை இயக்கினார். கோனேரிப்பாளையத்தை சேர்ந்த ராஜா (35) என்பவருடன் ஆலம்பாடியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு பைக்கில் நேற்று சென்றார். கோனேரிப்பாளையம்- செஞ்சேரி புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, 2 பைக்குகளில் வந்த 6 பேர், செல்வராஜை சினிமா பாணியில் விரட்டி பின்தொடர்ந்தனர்.
அப்போது மர்மநபர்களில் ஒருவன், தன்னிடமிருந்த கத்தியால் செல்வராஜை வெட்டினான். படுகாயமடைந்த செல்வராஜ், பைக்கை நிறுத்தாமல் ஆலம்பாடிக்கு தப்பி சென்றார். இதையடுத்து மர்மநபர்கள் தப்பி சென்றனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் செல்வராஜ் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை தாக்கியது யார், எதற்காக தாக்குதல் நடந்தது என விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னை முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சென்னை வந்த விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த பேராசிரியர் கைது
கோயில் பூட்டு உடைத்து உண்டியல் கொள்ளை; அம்பத்தூர் அருகே இருவர் கைது
கூடுவாஞ்சேரி அருகே அரசு பெண் அதிகாரி வீட்டில் 32 சவரன் துணிகர கொள்ளை
செங்கல்பட்டு அருகே பேருந்து நிறுத்தத்தில் காந்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!
மதுரையில் போலீசார் அதிரடி கஞ்சா விற்ற தம்பதியின் ரூ.5.50 கோடி சொத்து முடக்கம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;