தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
2022-05-17@ 12:39:52

தருமபுரி: தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. அரூர், கடத்தூர், மொரப்பூர், பெண்ணகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீடித்ததால் வெப்பம் தனிந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
மதுரையில் வெயில் வாட்டிய நிலையில் நிலையில் திடீரென கோடை மழை கொட்டியது மாநகர பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் சாலையில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி பட்டனர். சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
தொடர் மழையால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஆனைமதகு தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலத்தில் மூன்று நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநகரில் குளிர்ச்சியான தட்பவெட்பநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பகல் நேரங்களில் கூட குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது. இந்த மழைக்கு முன்னதாக, வெயிலின் தாக்கத்தில் அவதியடைந்த மக்கள், குளிர்காற்று வீசுவதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!