வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழ்ந்த 250 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்தது
2022-05-17@ 12:11:12

வானூர்: வானூர் அருகே கழுப்பெரும்பாக்கம் கிராமத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழ்ந்த 250 ஆண்டுகால ஆல மரம் மழையில் வேரோடு சாய்ந்தது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கழுப்பெரும்பாக்கம் கிராமம், கழுவெளி அருகே அமைந்துள்ள ஊர் ஆகும். இக்கிராமத்தின் முக்கிய சாலையின் அருகே சுமார் 250 ஆண்டுகால ஆலமரம் இருந்தது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கில் வவ்வால்கள் தங்கி இருந்தன. இதனால் இந்த கிராமத்தில் தீபாவளி மற்றும் முக்கிய விழாக்களில் பட்டாசு வெடிப்பது இல்லை. மேலும் விழா காலங்களில் மேளதாளங்கள் இசைப்பதும் இல்லை.
தங்களது இன்ப, துன்பங்களை மறந்து பறவைகளின் சரணாலயமாக அந்த கிராம பொதுமக்கள் பாதுகாத்து வந்தனர்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையில் இந்த ஆல மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் அந்த மரத்தில் இருந்த வவ்வால்கள் பதறி பறந்து சென்றன. மின்சாரம் தடைபட்டதால் உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் மின் ஊழியர்கள் துணையுடன் இயந்திரம் மூலம் மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். வவ்வால்களின் சரணாலயமாக இருந்த மரம் சாய்ந்தது, அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!