இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் - பாலஸ்தீனர்கள் இடையே மோதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்
2022-05-17@ 10:42:33

ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் , பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த லாவிட் ஷெரீப் என்ற 21 வயதான பாலஸ்தீன இளைஞர் நேற்று உயிரிழந்தார்.
இதனையடுத்து, உயிரிழந்த ஷெரீப்பின் உடல் அல் அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் அடக்கம் செய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனர்கள் சிலர் கற்கள் வீசினர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் வீசப்பட்டது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 100பேர் காயமடைந்தனர். இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் மோதலை அடுத்து ஜெருசலேமில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ரஷ்யா வசமுள்ள உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: ராணுவமற்ற பகுதியாக அறிவிக்க ஐ.நா. அவை வலியுறுத்தல்...
கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கண் பார்வையை இழக்க நேரிடலாம் என அதிர்ச்சி தகவல்...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.38 கோடியை தாண்டியது.! 64.51 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகின் மற்ற பகுதிகளை விட 4 மடங்கு வேகமாக சூடேறும் ஆர்க்டிக்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஓட்டல் அறையை விட்டு வெளியே வரவே கூடாது: கோத்தபயவுக்கு தாய்லாந்து அரசு தடை
அம்பந்தொட்ட துறைமுகத்துக்குள் வராமல் 600 நாட்டிகல் மைல் தூரத்தில் சீன உளவு கப்பல் நிற்பது ஏன்?: இந்தியாவுக்கு சிக்கல் வலுக்கிறது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!