செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
2022-05-17@ 01:42:52

அம்பத்தூர்: பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். அயனாவரம் அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குணசுந்தரி(44). அப்பகுதியில் டிபன் கடை நடத்திவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஐசிஎப் கொன்னூர் நெடுஞ்சாலை அம்மா உணவகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் குணசுந்தரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்த குணசுந்தரி செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடித்து ஐசிஎப் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், வேப்பேரியை சேர்ந்த பிரகாஷ்(25), ஆட்டோ டிரைவர். புளியந்தோப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவனை கீழ்ப்பாக்கம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
மேலும் செய்திகள்
பந்தலூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையன் கைது
கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியதால் வாலிபரை கொலை செய்தோம்-கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நடந்த 83 பவுன் தங்க நகை கொள்ளையில் 2 தனிப்படைகள் விசாரணை-கைரேகைகள் சிக்கின
அண்ணாசாலையில் பைக்கில் சென்றவரை வழிமறித்து ரூ.20 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற இலங்கை பெண் கைது
வீட்டை உடைத்து 12 சவரன் திருட்டு
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!