வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
2022-05-17@ 01:30:07

திருவள்ளூர்: வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை ஒருங்கிணைத்து உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் பெறலாம். இதில் பயன்பெற 8ம் வகுப்பு தேர்ச்சியும், 18 வயது நிரம்பியவராகவும் இருப்பது அவசியம். கடனுதவி பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு கிடையாது. தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிகுழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோரும் பயன் பெறலாம். பொது பிரிவினர் நகர் புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 15 சதவிதம் மானியமும், ஊரக பகுதியில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
சிறப்பு பிரிவினர்களான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினர் நகர்புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், ஊரக பகுதியில் தொழில் தொடங்கினால் 35 சதவீத மானியமும் வழங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்ட தொழில் மையம் மூலம் இந்த ஆண்டில் 285 பேருக்கு கடனுதவியும், இதற்காக மானிய தொகையாக ரூ.8.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் கடன் உதவி பெற விரும்புவோர் இணையதள முகவரி www.kviconline.gov.in/pmegpeportalல் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்கள் பெற பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழில் பேட்டை, காக்களுர், திருவள்ளூர் - 602003 என்ற முகவரியில் நேரில் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஜூலை 1ம் தேதி முதல் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: புதுச்சேரி நகராட்சி அதிரடி
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்கள்: பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் முறையாக பெண் கண்டக்டர் நியமனம்: ஆர்வமுடன் பணியாற்றுவதாக நெகிழ்ச்சி
புதுகை அருகே ஏர் கலப்பையுடன் விவசாயி உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
பலத்த காற்று வீசுவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ அணைப்பதில் சிக்கல்: 3வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் 7 இடங்களில் வேகத்தடை அமைப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!