அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
2022-05-17@ 01:27:49

ஆவடி: அண்ணனூர் ரயில் நிலையம் அருகே போலீசாரின் வாகன சோதனையில் பிரபல திருடன் சிக்கினான். அவனது கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே திருமுல்லைவாயல் உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், அம்பத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராமு(25). இவரது நண்பர் மாயவன்(20) இருவரும் கடந்த 28ம் தேதி அண்ணனூர் சிவசக்தி நகர் சுகுணா டெய்லர் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் மற்றும் பட்டுப்புடவை திருடியது தெரியவந்தது. மேலும் ராமுவின் மீது ஸ்ரீபெரும்புதூர், வில்லிவாக்கம், திருவள்ளூர் போன்ற காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான உள்ள அவரது கூட்டாளி மாயவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பந்தலூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையன் கைது
கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியதால் வாலிபரை கொலை செய்தோம்-கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நடந்த 83 பவுன் தங்க நகை கொள்ளையில் 2 தனிப்படைகள் விசாரணை-கைரேகைகள் சிக்கின
அண்ணாசாலையில் பைக்கில் சென்றவரை வழிமறித்து ரூ.20 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற இலங்கை பெண் கைது
வீட்டை உடைத்து 12 சவரன் திருட்டு
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!