சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
2022-05-17@ 00:15:40

விருத்தாசலம்: சில்லரை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பாமக கவுன்சிலர் உட்பட 3 பேரை போலீசார் தேடுகின்றனர். சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை வந்தது. அந்த பஸ் கண்டக்டர் மணிகண்ணனுக்கும், பெண் பயணி ஒருவருக்கும் சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண் பயணி விருத்தாசலத்தில் உள்ள தனது உறவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சிதம்பரத்தில் இருந்து வந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் மணிகண்ணனை தாக்கியதோடு ஆட்டோவில் அவரை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து அறிந்த அரசு பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கண்டக்டரை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார், கண்டக்டர் மணிக்கண்ணனை மீட்டதோடு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த கோவிந்தன் (20), மோகன்ராஜ் (40), வெங்கடேசன், நகராட்சி 27வது வார்டு பாமக கவுன்சிலரும், மாவட்ட வன்னியர் சங்க தலைவருமான சிங்காரவேல், அசோக்குமார்(19), ஆட்டோ டிரைவர் மற்றும் ஒருவர் என 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கோவிந்தன், மோகன்ராஜ், அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யபபட்டனர். தலைமறைவாக மற்ற 3 பேரை தேடி வருகின்றனர். இதையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பஸ்களை இயக்கினர்.
Tags:
Retailer female passenger dispute government bus conductor assaulted Pamaka councilor web 3 arrested சில்லரை பெண் பயணி தகராறு அரசு பஸ் கண்டக்டர் தாக்கி பாமக கவுன்சிலருக்கு வலை 3 பேர் கைதுமேலும் செய்திகள்
ஆதம்பாக்கத்தில் வீட்டின் கதவை உடைத்து, 15 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை
செங்கல்பட்டு அருகே கால்டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
பழைய பொருளை குறைந்த விலைக்கு தர மறுத்த காயலான் கடை ஊழியரை சரமாரி தாக்கிய 3 பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தி, மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
பந்தலூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையன் கைது
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!