உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி; பல்வேறு தரப்பினரும் பாராட்டு
2022-05-16@ 16:30:50

அகமதாபாத்: உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் ஹேமந்த் லலித்சந்திர லியூவா - அவரது மனைவியான டாக்டர் சுரபிபென் ஹேமந்த் ஆகியோர் உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். அதனால் எவரெஸ்ட் சிகரத்தில் ஒன்றாக ஏறி சாதனைப் படைத்த முதல் இந்திய மருத்துவ தம்பதியினராக பாராட்டப்படுகின்றனர்.
இதுகுறித்து நேபாளத்தில் உள்ள ஸ்டோரி அட்வென்ச்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரிஷி பண்டாரி கூறுகையில், ‘குஜராத்தைச் சேர்ந்த டாக்டர் ஹேமந்த் லலித்சந்திர லியூவா, அவரது மனைவி டாக்டர் சுரபிபென் ஹேமந்த் லியூவா ஆகியோர் 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு அடைந்தனர். உலகின் மிக உயரமான சிகரத்தை (எவரெஸ்ட்) ஏறிய முதல் இந்திய மருத்துவ ஜோடி என்ற பெருமையை அவர்கள் பெற்றனர். டாக்டர் ஹேமந்த், என்ஹெச்எல் நிகாம் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பேராசிரியராக உள்ளார். அவரது மனைவி சுரபிபென், குஜராத் வித்யாபீடத்தில் தலைமை மருத்துவ அதிகாரியாக உள்ளார்’ என்றார்.
மேலும் செய்திகள்
பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 16 பேர் பலி... உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!!
டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
தப்பிக்குமா உத்தவ் தாக்கரே அரசு!: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது சிவசேனா..!!
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு: ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தகவல்..!!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆணை!!
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!