புதுச்சேரியில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது
2022-05-14@ 12:58:13

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபோதையில் கார் ஓட்டி 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரவுடியின் காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கியத்துடன் அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். முத்தரையர் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற நண்டு ஆறுமுகம், பிரபல ரவுடியான இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் பாண்டி மெரினா கடற்கரைக்கு பொழுதுபோக்கிற்காக சென்றுள்ளனர்.
அப்பொழுது கடற்கரையில் அமர்ந்து மதுகுடித்த ஆறுமுகம் நிதானம் இழந்து குடும்பத்தாருடன் காரில் வீட்டிற்கு புறப்பட்டார். கடற்கரையில் இருந்து ரயில்வே நிலையம் அருகே வரும்போது போதை தலைக்கேறிய அவர் காரை தாறுமாறாக ஊட்டியதில் சாலையில் சாலையில் நின்றுகொண்டிருந்த மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகனம் உட்பட 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் அச்சத்தில் அலறிய பொதுமக்கள் ஆறுமுகத்தின் காரை அடித்து உடைத்ததோடு அவருக்கும் தர்மஅடி கொடுத்தனர். ஆறுமுகத்தின் கார் மோதியதில் காயமடைந்த பொதுமக்கள் 5 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
அதிமுக மாவட்ட மாணவரணி தலைவருக்கு சரமாரி வெட்டு: போதை ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
விதவையை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது
வாயில் விஷத்தை ஊற்றி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
காவேரிப்பாக்கம் அருகே இன்று கொலை செய்து புதைக்கப்பட்ட சென்னை முதியவர் சடலம் தோண்டி எடுப்பு
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வங்கி கணக்கில் கொள்ள: மொபைல் பேங்க் லிங்க் அனுப்பி வடமாநில கும்பல் கைவரிசை
ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்