வரத்து குறைவால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு
2022-05-14@ 12:19:21

சென்னை: அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,200 டன் தக்காளி தேவைப்படுவதாக கூறும் வியாபாரிகள் தற்போது 700 டன் அளவிற்கே தக்காளி வருவதாக கூறுகின்றனர்.
கோடைகாலம் என்பதால் அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விலையில் பெங்களூரு தக்காளி ரூ.70-க்கும், நாட்டு தக்காளி ரூ.60-க்கும் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் பெங்களூரு தக்காளி ரூ.85-க்கும், நாட்டு தக்காளி ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி மட்டுமின்றி பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு தக்காளி அதிகமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மலபார் கோல்டு டைமண்ட்ஸில் இந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் விற்பனை
திருப்பதியில் கங்கனா தரிசனம்
தசாவதாரம் 2ம் பாகம் உருவாக்கவே முடியாது: சொல்கிறார் கே.எஸ்.ரவிகுமார்
பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!