பீகாரில் முதல்வர் ஆய்வு செய்துவிட்டு சென்ற சிலமணி நேரத்தில் உடைந்த ஆற்றங்கரை; ஊருக்குள் தண்ணீர் புகுந்தது..!!
2022-05-14@ 11:55:58

சிதாமார்ஹி: பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆய்வு செய்துவிட்டு சென்ற சிலமணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் ஆற்றங்கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சிதாமார்ஹி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் லவாஹே ஆற்றில் பழைய நீர் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பழைய நீர்வழி தடத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்ட நிதிஷ்குமார், நீரை திறந்துவிட உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஆய்வை முடித்துக்கொண்டு அவர் சென்ற சிறிது நேரத்தில் ஆற்றங்கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. நீர்வழித்தடத்தை சீரமைப்பதன் வாயிலாக அருகில் உள்ள கிராமங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் ஆய்வு செய்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் கரை உடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
அதிகாரிகள் காட்டிய எஃப்ஐஆரில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை: சி.பி.ஐ. சோதனை குறித்து ப.சிதம்பரம் விளக்கம்..!
10 ஆண்டுகள் நிறைவில் 6ஜி சேவைகளை தொடங்க முடியும்: டிராய் அமைப்பின் வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பேச்சு
தாஜ்மகாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை.... புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல்துறை!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
திருப்பதி ஏழுமலையான் கோயில்; வைகாசி மாத பவுர்ணமி கருட சேவை: மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்
பணம் பெற்றுக் கொண்டு சீனர்களுக்கு விசா?.. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!