சில்லி பாயின்ட்...
2022-05-14@ 00:13:40

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரலியோ), இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும், சிகிச்சைக்காக உடனடியாக நாடு திரும்பியுள்ளார்.
* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் வேகம் உம்ரன் மாலிக், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகத்தில் பந்து வீசிய சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து 155 கிமீ வேகத்தில் பந்து வீசி வரும் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல், ‘உம்ரன் மாலிக் பாகிஸ்தானில் இருந்திருந்தால் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருப்பார். இந்தியாவில் இப்போது பும்ரா, சைனி, சிராஜ், ஷமி என தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய உள்ளனர். அதனால்தான் அவர்களுக்கு வீரர்களை தேர்வு செய்வது கடினமாகி உள்ளது’ என்று கூறியுள்ளார்.
* பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் (30). அவர் சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த டி20 உலக கோப்பையில் விளையாட தனது கைக்குழந்தை, அம்மாவுடன் சென்றிருந்தார். இந்நிலையில், இங்கிலாந்தில் ஜூலையில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பிஸ்மா குழந்தையுடன் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் அணியில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
Tags:
சில்லி பாயின்ட்மேலும் செய்திகள்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சு வீண் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி: மார்ஷ் அரை சதம்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் திணறல்: மார்ஷ் அரை சதம்
கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்
சில்லி பாயின்ட்...
இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!