அந்தமானில் நேற்றிரவு நிலநடுக்கம்
2022-05-01@ 14:10:17

போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் நேற்றிரவு 11.04 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அதன் தீவிரம் 4.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அந்தமானில் உள்ள டிக்லிபூருக்கு தென்மேற்கே 3 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நில நடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் கேம்ப்பெல் தளத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு ஜனவரியில் 24 நாட்களில் 10 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் யூனியன் பிரதேசமான லடாக்கில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் 3.4 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!
மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை: ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் கருத்தால் சர்ச்சை
எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி.. அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு!
வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே எம்.பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி