திருப்புத்தூர் அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா
2022-04-25@ 12:08:16

*கட்லா, ஜிலேபி அதிகளவில் சிக்கின
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கட்லா, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின. தென்மாவட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களில் விவசாய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்திய பிறகு, நீர் வற்றியதும் கிராமத்தின் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம்.
இதில் அருகில் இருக்கும் கிராம மக்களும் கலந்து கொண்டு ஒற்றுமையாக, கண்மாயில் கிடைக்கும் மீன்களை பிடித்துச் செல்வார்கள். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள கண்ணடி கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் பூலாங்குறிச்சி, துவார், திருக்கோளக்குடி, ஆத்திரம்பட்டி, செவ்வூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சிறுவர்கள், பெரியவர்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாரம்பரிய முறைப்படி மூங்கிலால் வேயப்பட்ட ஊத்தா என்ற மீன்பிடி பொருளை வைத்து போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் விரால், கட்லா, ஜிலேபி, கெழுத்தி, ரோகு உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின. இதனால் அப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் மீன் குழம்பு வாசனை மூக்கை துளைத்தது. இதேபோல் காரைக்குடி அருகே செவரக்கோட்டை நெடுவா கண்மாயிலும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதிலும் ஏராளமான கிராமமக்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!