மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை: குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து
2022-04-10@ 15:10:05

தென்காசி: குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நேற்று முன்தினம் வரை வறண்டு காணப்பட்ட அருவிகளில் சற்று தண்ணீர் விழுகிறது. குற்றாலத்தில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்தது. சுட்டெரித்த அனலின் தாக்கம் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வறண்ட நிலையை அடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் மழை காரணமாக அருவிகளில் நேற்று காலை முதல் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் 3 பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்திலும் குறைவாக தண்ணீர் விழுந்தது. கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக காணப்படுகிறது.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!