பட்ஜெட்டில் நிதிநிலை சீர்திருத்தம் வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம்: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி
2022-02-20@ 00:25:39

மதுரை: பட்ஜெட்டில் நிதிநிலையில் சீர்திருத்தத்தை காண்பிப்போம், வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம் என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மகளிர் பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று வாக்களித்த பின் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி: ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டமன்றத்திற்கு வராத 18 பேரை நீக்கி, கட்சியை எதிர்த்து வாக்களித்த 12 பேரை சட்டத்திற்கு விரோதமாக மன்றத்திற்குள் வைத்து, ஊழலுடன் ஆட்சியில் நீடித்த அதிமுகவினர், ஜனநாயகரீதியாக வெற்றி கண்ட திமுக அரசை முடக்கப் போவதாக உளறி வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை. இது அடிப்படை அறிவற்ற வாதம். முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறந்த தலைமைத்துவம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தரும்.
ஜிஎஸ்டி கூட்டத்தில் எனது உரை பெரும் தாக்கம் தந்தது உண்மை. கூட்டத்தில் தகவலோடு உரையாற்றி எனது வாதத்தை அறிக்கையாக சமர்ப்பித்தேன். இதனை பிரச்சனையாக்குவதாக சொன்னால் ஜிஎஸ்டி நிலைக்குழுவில் என்னை ஏன் உறுப்பினராக போட்டனர்? அனைவருடனும் இணைந்து பேசி நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் செயலாற்றி வருகிறோம். செயல்பட வேண்டியது மாநிலங்கள், மாவட்டங்கள், உள்ளாட்சிகள். இதனை வைத்துதான் கட்டமைப்பை திருத்த முடியும். எல்லாவற்றையும் ‘‘ஒரே.. ஒரே’’ என்று டெல்லியில் இருந்து செய்ய முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை சரிந்தது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்து கடன் வாங்க கூடிய எல்லையை மீறி சுமார் ₹30 ஆயிரம் கோடியை ஒளிவு மறைவாக எடுத்துள்ளனர். இதனை வெள்ளை அறிக்கையில் காண்பித்துள்ளேன். அந்த அளவு இருந்த சூழ்நிலையை, சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு ஒரே ஆண்டில் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலைகளை தாண்டி, முதல் முறை ஆட்சிக்கு வந்தவர் என்பதையும் தாண்டி, பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெட்ரோல் விலை குறைப்பு, மகளிர் சுயஉதவி குழு கடன் ₹2,600 கோடி தள்ளுபடி, குடும்ப அட்டைதாரருக்கு ₹4,000 என பல வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.
அதன்பிறகு, இந்த ஆண்டு நிதி நிலைமை சீர்திருத்தத்தை காண்பிக்க போகிறோம். இதுதான் சிறந்த தலைமையின் அடையாளம். இதன் வெளிப்பாட்டை விளைவை வைத்து யாருடைய ஆட்சி சிறந்தது என்பதை மக்கள் முடிவெடுக்கட்டும். பட்ஜெட் என்பது வரக்கூடிய ஆண்டிற்கான இலக்கு. தலை இல்லாத வால்களும், கால்களும் ஆட்சி நடத்தியதால் தமிழ்நாட்டில் நிதி நிலைமை சரிந்தது. வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம். வாரம்தோறும் இதற்கான கூட்டம் நடத்தி கோப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து திருத்திக்கொண்டு வருகிறோம். அதனை செம்மையாக செய்து முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
புதுவையில் ஜி20 மாநாட்டில் 17 நாட்டு விஞ்ஞானிகள் கலந்துரையாடல்: இன்று ஆரோவில் செல்கின்றனர்
மகளிடம் காதலிக்க வற்புறுத்திய வாலிபர் தட்டிக்கேட்ட சிறை காவலர் மீது கொலை வெறி தாக்குதல்: கும்பலை கைது செய்யக்கோரி 3 மணி நேரம் மறியல்; குழந்தையுடன் 3 பெண்கள் தற்கொலை முயற்சி
பணி நியமனத்தில் முறைகேடு சேலம் பெரியார் பல்கலையில் அரசு குழு விசாரணை துவக்கம்: 2 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க ஆணை
அரசு துறைகளின் அதிரடி நடவடிக்கையால் 80 ஆண்டு தீண்டாமை முடிவுக்கு வந்தது: அம்மன் கோயிலில் பொங்கலிட்டு பட்டியலின மக்கள் வழிபாடு
சர்க்கரை நோய் பாதிப்பால் 8 மாத குழந்தை உயிரிழப்பு
நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்: கண்ணாடியை உடைத்து தப்பிய பயணிகள்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!