தண்ணீர் இருந்தும் குளிக்க முடியவில்லை கண்மாயை ஆக்கிரமித்த செடிகள்: சுத்தம் செய்ய மக்கள் கோரிக்கை
2022-02-10@ 11:59:32

திருவாடானை: திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் ஊரின் மத்தியில் பெரிய பாசன கண்மாய் உள்ளது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் அதிக மழை பெய்ததால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. விவசாயம் முடிந்துவிட்ட நிலையில் தண்ணீர் மீதமாக உள்ளது. இந்த தண்ணீரில் சுண்டி கீரை என்னும் வகை செடி முழுவதையும் ஆக்கிரமித்து படர்ந்து கிடக்கிறது. இதனால் தண்ணீரின் நிறம் மாறி காட்சியளிக்கிறது. கண்மாயில் இறங்கி குளித்தால் உடல் முழுவதும் ஒருவித அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் குளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் கிராமமக்கள் கூறுகையில், இங்கு போதிய அளவில் நிலத்தடி நீர் இல்லாததால் குளிக்க இந்த கண்மாய் தண்ணீரைதான் நம்பி உள்ளோம். அதிக அளவில் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. கண்மாயில் சுண்டி கீரை செடி படர்ந்து கிடக்கிறது. இந்த செடியினால் தண்ணீர் நிறம் மாறிவிட்டது. மேலும் இதில் இறங்கி குளித்தால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிக அளவில் தண்ணீர் இருந்தும் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் இருந்ததை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி உதவி செய்தனர். அதுபோல் இந்த ஆண்டும் இந்த செடியை அகற்றித் தந்தால் உதவியாக இருக்கும் என்றனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!