தொடர் எதிர்ப்பு எதிரொலி தியேட்டரில் வெளியாகிறது மோகன்லால் படம்
2022-02-09@ 00:12:00

சென்னை: தியேட்டர் அதிபர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, மோகன்லால் நடிக்கும் ஆராட்டு என்ற மலையாள படம் தியேட்டர்களில் வெளியாகிறது.மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2, சமீபத்தில் வெளியான ப்ரோ டாடி ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது. தொடர்ந்து பஹத் பாசில், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள ஹீரோக்களின் படங்களும் ஓடிடியில் வெளியானதால், தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால் தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் இடையே கடும் மோதல் போக்கும் ஏற்பட்டது.இந்நிலையில், இந்தப்பிரச்னையில் சுமூகமாக செல்ல நடிகர்கள் முயற்சி செய்தனர். இதையடுத்து கொரோனா பாதிப்பு இல்லாத பட்சத்தில், தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிப்பதாக தயாரிப்பாளர்கள் சேர்ந்து உறுதி அளித்தனர்.அதன்படி, இப்போது மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு என்ற மலையாள படம் வரும் 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது
கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!