கொள்ளிடம் அருகே ரேஷன் கடை திறக்காததை கண்டித்து மக்கள் மறியல்
2022-01-29@ 12:55:33

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே ரேஷன் கடை தொடர்ந்து திறக்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூரில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் விற்பனையாளர் மேலும் இரண்டு கடைகளில் பணிபுரிந்து, இந்த கடையிலும் பணிபுரிந்து வருவதால் ஒரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே புத்தூர் ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிகிறது. தொடர்ந்து அனைத்து நாட்களிலும் ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளதால் அனைத்து அத்யாவசிய பொருட்களையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த கடையின் மூலம் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சாலையின் குறுக்கே கையில் எடுத்து வந்த பைகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கொள்ளிடம் எஸ்ஐ., மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
இனி பெட்ரோல் கவலை இல்லை!: பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் : பழனி மாணவரின் அசாத்திய கண்டுபிடிப்பு.!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்