தடுப்பூசி செலுத்தாமல் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் சிலருக்கு மரணம் : அமைச்சர் மா.சுப்ரமணியன்
2022-01-29@ 11:58:59

சென்னை : தடுப்பூசி செலுத்தாமல் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் கடுமையான பாதிப்பை சந்திப்பதாகவும் சிலர் மரணத்திற்கு தள்ளப்படுவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 20வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், தமிழ்நாட்டில் 9.39 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியும் 3.44 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் இதுவரை 47.09 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாகவும் இதுவரை விபத்துகளில் சிக்கிய 15,000த்திற்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை 97 லட்சம் பேர் 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என தெரிவித்த அமைச்சர் மா சுப்ரமணியன், பரவி வரும் புதிய வகை வைரஸின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகள்
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
செம்பரம்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் நாட்டில் உள்ள இதர நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும்: ஒன்றிய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு
சென்னை பிரபல மாலில் நடந்த மது விருந்தில் அதிர்ச்சி சம்பவம் அதிக போதையில் மயங்கி விழுந்து பலியான ஐ.டி. ஊழியர்: போதைப்பொருள் குறித்து போலீஸ் விசாரணை
மதுரவாயல் முதல் துறைமுகம் வரை ஈரடுக்கு பறக்கும் சாலை 110 பழைய தூண்களை பயன்படுத்த முடிவு
அணை, ஏரிகள், நிலத்தடி நீரின் விவரங்களை உள்ளடக்கிய நீர்வள தகவல் ேமலாண்மை அமைப்பு உருவாக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு: நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்