பாலமேடு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட படிக்கட்டிற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
2022-01-29@ 11:45:29

அலங்காநல்லூர்: பாலமேடு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட படிக்கட்டிற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலமேட்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கு கடந்த 2020-21.ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் நபார்டு வங்கி நிதியின் மூலம் 37 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் ஏறி செல்ல முடியாத அளவுக்கு படிக்கட்டு மிக உயரமாக கட்டப்பட்டுள்ளது.
மேலும் பக்கவாட்டு சுவரும் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த புதிய கட்டிடம் திறப்பு விழா காணும் முன்பு படிக்கட்டு அமைப்பை மாற்றி அமைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் ஏறிச்செல்லும் வகைகள் தாழ்தள மேடையும், பக்கவாட்டு சுவருடன் கூடிய படிக்கட்டு அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி 4ம் ஆண்டு நினைவு தினத்தில் பொதுமக்கள் அஞ்சலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்