மும்பை நட்சத்திர ஓட்டல் மீது நடிகை புகார்
2022-01-29@ 00:56:43

சென்னை: மலையாளத்தில் ஒரு அடார் லவ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். தெலுங்கில் செக் படத்தில் நடித்தார். இந்தி படத்தில் நடிப்பதற்காக மும்பையில் கோர்காவ்ன் பகுதியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் பிரியா தங்கியிருந்தார். அப்போது ஓட்டலில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி அவர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பிரியா கூறியிருப்பதாவது: மும்பையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியிலுள்ள ஒரு ரெஸ்டாரண்டில் எனக்கான இரவு உணவை வாங்கினேன். அதை எடுத்துக்கொண்டு ஓட்டலுக்கு சென்றால், அங்கிருந்த ஊழியர்கள் என்னை தடுத்தனர்.
வெளியிலிருந்து கொண்டு வந்த உணவை ஓட்டலுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்றனர். எனது அறையில் சென்றுதானே சாப்பிடப் போகிறேன் என சொல்லியும் விடவில்லை. இந்த உணவை ஓட்டலுக்கு வெளியே சென்று சாப்பிடுங்கள். அல்லது குப்பையில் போடுங்கள் என்றனர். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உணவை வீணாக்க விரும்பவில்லை. வெளியே சென்று சாப்பிட்டு வந்தேன். ஓட்டல் நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற செயல் எனக்கு வியப்பை கொடுத்தது. இவ்வாறு பிரியா புகார் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு
டி. ஆர். டி. ஓ. அமைப்பின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்: இ-ஸ்கூட்டர்களில் பேட்டரி வடிவமைப்பில் குறைபாடு அம்பலம்
டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை: விமானசேவை பாதிப்பால் மக்கள் அவதி
குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடக்காது... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி!!
இந்தியாவில் ஒரே நாளில் 2,022 பேருக்கு கொரோனா.. 46 பேர் உயிரிழப்பு.. 2,099 பேர் குணமடைந்தனர்!!
பேட்டரி வடிவமைப்பு குறைபாடும், சரிவர பரிசோதிக்கப்படாததுமே இ - ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க காரணம் : டி.ஆர்.டி.ஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்