சொத்து மதிப்பு ரூ.4,847 கோடி: நாட்டின் மிகப்பெரிய பணக்கார கட்சி பாஜ
2022-01-29@ 00:35:45

புதுடெல்லி: நாட்டிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட கட்சிகளில் ரூ4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் பாஜ முதலிடம் பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் செலவுகளுக்காக நிறுவனங்கள், பொதுமக்களிடம் நிதி வசூலித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தேர்தல் பத்திரம், காசோலை மூலமாக நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் அரசியல் கட்சிகள் ஏராளமான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளன.
இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அனைத்துக் கட்சிகளுடைய சொத்து விவரங்களை தணிக்கை செய்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் 7 தேசிய கட்சிகள், 44 மாநிலக் கட்சிகளின் 2019-20ம் நிதியாண்டுக்கான சொத்து மதிப்பு முறையே ரூ6,988.57 மற்றும் ரூ2,129.38 கோடியாக உள்ளது. இதில் பாஜ ரூ4,847.78 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த தேசிய கட்சிகளின் சொத்துக்களில் 69.37 சதவீதமாகும்.
இதையடுத்து, ரூ698.33 கோடியுடன் அதாவது 9.99 சதவீதத்துடன் 2வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், 8.42 சதவீதத்துடன் ரூ588.16 கோடி சொத்து மதிப்புடன் காங்கிரஸ் 3வது இடத்திலும் உள்ளன. அனைத்து மாநில கட்சிகளில் முதலிடத்தில் உள்ள 10 கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ2,028.715 கோடியாக அதாவது 95.27 சதவீதத்துடன் உள்ளது. இதில் சமாஜ்வாடி ரூ563.47 (26.46%), தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ310.47, அதிமுக ரூ267.61 கோடியுடன் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.
இதே போல், திமுக ரூ162.425 கோடி, சிவசேனா ரூ148.46 கோடி, பிஜூ ஜனதா தளம் ரூ118.425 கோடியுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. மேலும், 44 கட்சிகளின் மொத்த கடன் மற்றும் நிலுவை தொகை ரூ134.93 கோடியாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
நடிகை தற்கொலை
கல்யாணம் பண்ணி வைங்க...அமைச்சர் ரோஜாவிடம் 65 வயது முதியவர் அடம்
டெல்லி ஆளுநர் ராஜினாமா
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்
லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது: 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!