முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் 9 இடங்களில் கண்காணிப்பு கேமரா-வனவிலங்கு நடமாட்டம், வனக்குற்றங்களை தடுக்க நடவடிக்கை
2022-01-28@ 13:58:38

கூடலூர் : உயரமான இரும்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக பொருத்தப்பட்டுள்ள இந்த 9 கேமராக்கள் மூலம் 360 டிகிரி கோணத்தில் வனப்பகுதிகளை கண்காணிக்க முடியும். அனைத்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் பதிவுகளை நேரடியாக தெப்பக்காட்டில் உள்ள பேஸ்- 4 கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு பணியாளர்கள் மூலம் கண்காணிக்கும் வகையிலும், கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு கேமராவை பல்வேறு கோணங்களில் திருப்பி வனப் பகுதிகளை கண்காணிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் அன்னிய நபர்கள் நடமாட்டம், வனவிலங்குகளின் நடமாட்டம், காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணிக்கும் வகையில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளின் எல்லைப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயையும் கண்காணித்து உடனடியாக காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து வனக் குற்றங்களில் ஈடுபடுவோரையும் கண்கானிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல: ஐகோர்ட் கிளை
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்: இரவு பகலாக தேசியக்கொடி தயாரிப்பு பணியில் மகளிர் சுய உதவிகுழு
கோவையில் விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்: தண்டவாளத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் பரபரப்பு; 3,000 பயணிகள் அதிர்ச்சி
தொடரும் வேட்டை!: அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..இந்து சமய அறநிலையத்துறை அதிரடி..!!
நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி - தனுஷ்கோடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி
தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு, சிலைகள் கண்டுபிடிப்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!