கைமாறும் ஏர் இந்தியா!: பிரதமர் நரேந்திர மோடியுடன் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் சந்தித்து ஆலோசனை..!!
2022-01-27@ 15:42:00

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சற்று நேரத்தில் முறைப்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பு டாடாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பானது நிகழ்கிறது. நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் ஒன்றிய அரசு விற்றபோது 18 ஆயிரம் கோடி ரூபாய் விலைக்கு டாடா குழுமம் அதனை வாங்கியது. இதில் 2700 கோடி ரூபாய் அரசுக்குப் பணமாகவும், மீதமுள்ள தொகை ஏர் இந்தியா தனது கடனை தீர்க்க பயன்படுத்த உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் நிறுவனமாக செயல்பட்டு வந்த நிலையில், அது தற்போது 69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்படவிருக்கிறது.
இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தது. இத்தகைய சூழலில் இன்று டாடா குழுமத்தில் இயக்குனர்களாக உள்ள ஒன்றிய அரசு பிரதிநிதிகள் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர்களுக்கு பதிலாக டாடா குழுமத்தின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். அடுத்தபடியாக டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை தனது பொறுப்பில் ஏற்று அதற்கு புதிய தலைமை அதிகாரி மற்றும் முக்கிய அதிகாரிகளை நியமிக்க இருக்கிறது. டாடா குழுமம் ஏர் இந்தியா மூலம் இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!
நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி
ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது 3 வீரர்கள் வீரமரணம்: வீரமரணம் அடைந்தவர்களில் தமிழரும் ஒருவர்
75வது சுதந்திர தின கொண்டாட்டம்: இடுக்கி அணையில் இருந்து மூவர்ணங்களில் பாய்ந்த தண்ணீர்
கணவரை பிரிந்த இளம்பெண் தோழியுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
ரக்ஷா பந்தன் பண்டிகை பிரதமர் மோடி வாழ்த்து
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!