உலகளவில் ஒரே வாரத்தில் 2 கோடி பேருக்கு கொரோனா... இதுவரை 36.28 கோடி பேருக்கு தொற்று உறுதி!!
2022-01-27@ 07:37:56

ஜெனீவா : உலகளவில் ஒரே வாரத்தில் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி 3-வது அலை, 4-வது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதன் கோர முகத்தை பல்வேறு வடிவங்களில் காட்டி வருகிறது.
இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,28,59,116 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,44,733 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,67,30,028 ஆகவும் உள்ளது.அமெரிக்காவில் புதிதாக 5,26,061 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,757 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. பிரிட்டனில் 1,61,49,319 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தினசரி கேஸ்கள் 3 லட்சத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. இதுவரை 4,03,69,585 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை
பாலியல் உறவால் வேகமாக பரவும் ‘மங்கிபாக்ஸ்’..! ஐரோப்பிய நாடுகளில் பீதி; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!!
தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் முகங்களை மறைக்க வேண்டும் : தாலிபான்களின் உத்தரவால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!!
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!: ஒரேநாளில் 2,000 குழந்தைகள் உள்ளிட்ட 17,000 பேர் வெளியேற்றம்..!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்