மாணவர்கள் சேர்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
2022-01-27@ 02:01:46

திருவள்ளூர்: மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவள்ளூர் நகராட்சி பள்ளியில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் தலைமை வகித்தார். வட்டார நிர்வாகிகள் தனஞ்செயன், மகாதேவன், பாலுமகேந்திரன், குமார், ரமணய்யா, பிரவீன், டி.ஸ்டீபன் சற்குணர், ஷிபா, மு.மகாலட்சுமி, பால்ராஜ் ரவி, மோகன் பாபு, காபிரியல், கோவர்த்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருவள்ளூர் மாவட்ட பொருளாளராக லோகய்யா, கல்வி மாவட்ட செயலாளராக எபிநேசர், கல்வி மாவட்ட தலைவராக சீனிவாசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் 2009க்கு பின்னர் பணியேற்றவர் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். பள்ளிப்பட்டு வட்டத்தில் தெலுங்கு, தமிழ் ஒருங்கிணைந்த பட்டியலின் படி பதவி உயர்வு நீதிமன்ற ஆணைபடி வழங்க வேண்டும்.ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வெளிப்பட ஆசிரியர் உயர் கல்வி பயின்றோருக்கு ஊக்க ஊதியம் உயர்வு, பழைய படி வழங்க வேண்டும். பள்ளிப்பட்டு வட்டாரத்தில் தெலுங்கு தமிழ் ஒருங்கிணைந்த பட்டியலின்படி நீதிமன்ற ஆணைபடி பதவி உயர்வு அளிக்கவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை பிரபல பொருட்கள் டெலிவரி மையத்தில் ரூ.2.35 லட்சம் திருட்டு: முசிறியில் நள்ளிரவில் பரபரப்பு
விடுதலையானார் பேரறிவாளன்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்... பேரறிவாளனுக்கு இனிப்புகள் ஊட்டி தாய், தந்தை, உறவினர்கள் நெகிழ்ச்சி!!
சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: ஆபத்தான முறையில் பாலத்தைக் கடக்கும் வாகன ஓட்டிகள்
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை : திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விபரீத முடிவு!!
இலங்கையில் பெட்ரோல், டீசல் கையிருப்பு காலி : இந்தியா 4 லட்சம் டன் டீசலை அனுப்பி உதவி; தமிழக அரசு சார்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!