சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
2022-01-27@ 02:00:32

பூந்தமல்லி: சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் நீலா (33), திருவேற்காட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நீலாவின் கடைக்கு ஒரு வாலிபர் சென்றார். அப்போது அவர், கேக் ஆர்டர் செய்வது போல் பேச்சு கொடுத்தார். அப்போது நீலா, அணிந்திருந்த செயினை பார்த்தும் அந்த செயின் மாடல் நன்றாக இருக்கிறது. அதுபோல் தனது மனைவிக்கு வாங்கி தர வேண்டும். அதன் மாடலை, தனது செல்போனில் போட்டோ எடுத்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து நீலா, தனது கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை கழற்றி டேபிள் மீது வைத்துள்ளார்.
அப்போது கடைக்கு மற்றொரு வாடிக்கையாளர் வந்து பொருள் கேட்டபோது, அதை எடுப்பதற்காக, நீலா சென்றார் அப்போது, 2 சவரன் நகையை எடுத்து கொண்டு வாலிபர் மாயமானார். இதுகுறித்து திருவேற்காடு போலீசில் நீலா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சென்னை தி.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை (எ) துரை (33), நகை திருடியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், நேற்று அவரை, சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் நகையை திருடியது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
க்ரைம் நியூஸ்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் முதியவரிடம் ரூ1.30 லட்சம் அபேஸ்: போலீசார் மீட்டனர்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்