சீன பகுதியில் நிலவும் மோசமான வானிலையால் மாயமான சிறுவனை விடுவிப்பதில் தாமதம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
2022-01-27@ 01:49:39

புதுடெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலம் அப்பர் சியாங் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் மிரம் தரோன்(17) கடந்த 18ம் தேதி மாயமானார். சீன எல்லையில் மாயமான சிறுவனை அந்தநாட்டு ராணுவம் கடத்தி சென்று காவலில் வைத்துள்ளதாக பாஜ எம்பி தபிர் கோவ் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சீன ராணுவத்தை தொடர்பு கொண்ட இந்திய ராணுவத்தினர் சிறுவனை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சிறுவனை மீட்டுவிட்டதாக சீன ராணுவம் தெரிவித்தது. இதற்கிடையில், ஒன்றிய அமைச்சர் கிரன் ரிஜிஜூ டிவிட்டர் பதிவில், ‘அருணாசல பிரசேத எல்லையில் மாயமான சிறுவனை மீட்டு தருமாறு சீன ராணுவத்திடம் இந்திய ராணுவ வீரர்கள் ‘ஹாட்லைன்’மூலம் தொடர்பு கொண்டு பேசினர். சீன ராணுவம் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக மிரம் தரோனின் படம் மற்றும் விவரங்கள் அளிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் விடுத்த கோரிக்கைக்கு சீன ராணுவம் அளித்த பதில்கள் திருப்திகரமாக உள்ளது. சிறுவனை விடுவிப்பதற்கான இடம், தேதி மற்றும் நேரம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் சீனா தெரிவித்துள்ளது. சீன பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தான் சிறுவனை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
Tags:
Chinese area bad weather magic boy Union Minister informed சீன பகுதி மோசமான வானிலை மாயமான சிறுவனை ஒன்றிய அமைச்சர் தகவல்மேலும் செய்திகள்
ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த கடை ஊழியருக்கு அடிஉதை...மூன்று இளைஞர்களை தேடிவருகிறது காவல்துறை
ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்!!
30 ஆண்டுகால சட்டப்போராட்டம் வெற்றி... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,829 ஆக அதிகரிப்பு.. 33 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!