அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் விசா
2022-01-27@ 01:48:26

வாஷிங்டன்: சீனா உள்பட உலக நாடுகளை மிஞ்சும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை மூலம் வலுப்படுத்த, ஸ்டார்ட்அப் விசா அளிக்கும் அமெரிக்க போட்டிகள் சட்டம் 2022 மசோதா, பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் பைடன் அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, குடியுரிமை மற்றும் நாட்டுரிமை சட்டத்தில் `டபிள்யூ’ என்று புதிய பிரிவு குடியுரிமை இல்லாத ஸ்டார்ட்அப் தொழில் தொடங்கும் நிறுவனத்தின் முக்கிய ஊழியர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஸ்டார்ட்அப் விசா வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த செவ்வாய் கிழமை தாக்கல் செய்த மசோதா விதிகளின்படி, ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி, சட்டப்பூர்வ, நிரந்தர குடியுரிமை கோரி சுயமாக விண்ணப்பிக்கும் தொழில்முனைவோரை அனுமதிக்கும் விதிமுறைகளை உருவாக்கும்படி உள்துறை அமைச்சகத்தின் செயலருக்கு இந்த மசோதா வழிகாட்டுகிறது. இந்த புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அவற்றின் வளர்ச்சி அடிப்படையில் `டபிள்யூ-1’, `டபிள்யூ-2’ என்ற விசா பிரிவுகளின் கீழ் முதலில் 3 ஆண்டுகளும் பிறகு 8 ஆண்டுகள் வரை நீட்டித்து கொள்ளும் விசா வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன.
மேலும் செய்திகள்
பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை
பாலியல் உறவால் வேகமாக பரவும் ‘மங்கிபாக்ஸ்’..! ஐரோப்பிய நாடுகளில் பீதி; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!!
தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் முகங்களை மறைக்க வேண்டும் : தாலிபான்களின் உத்தரவால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!!
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!: ஒரேநாளில் 2,000 குழந்தைகள் உள்ளிட்ட 17,000 பேர் வெளியேற்றம்..!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்