ரூ.5 லட்சம் கடனை அடைக்க கொள்ளையனாக மாறிய மாநகராட்சி ஊழியர்
2022-01-27@ 01:03:05

சென்னை: சேத்துப்பட்டு 16வது அவென்யூவில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர் பணம் எடுப்பதுபோல் ஏடிஎம் இயந்திரத்தை இரும்பு ராடால் உடைத்தார். தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். போலீசார் வந்து பார்த்தபோது, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் அவர் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவி பதிவு மூலம் இதுதொடர்பாக அன்னை சத்தியா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார்(28) என்பவரை பிடித்தனர். விசாரணையில், இவர் சென்னை மாநகராட்சி 9வது மண்டலத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருவது தெரியவந்தது.
மேலும், தனக்கு ரூ.5 லட்சம் கடன் இருந்த நிலையில், தனது மனைவியுடன் குடித்தனம் செல்ல தனது மாமியார் தொடர்ந்து வலிறுத்தினார். இதனால் பணம் தேவைப்பட்டது. பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. எனவே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் கடனை கட்டிவிட்டு தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
Tags:
Rs 5 lakh debt repayment robbery corporation employee ரூ.5 லட்சம் கடனை அடைக்க கொள்ளை மாநகராட்சி ஊழியர்மேலும் செய்திகள்
நடுரோட்டில் பைனான்சியர் வெட்டி கொலை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலால் பரபரப்பு
வளசரவாக்கத்தில் கொலை செய்து காவேரிப்பாக்கத்தில் அடக்கம்: தந்தையை கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு புதைப்பு
பூ வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்; உருட்டுக்கட்டையால் அடித்து 2 மகள்கள் படுகொலை: குடிபோதையில் தந்தை வெறிச்செயல்
லட்சத்தீவு அருகே ரூ.1,526 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல்: குமரியை சேர்ந்தவர்கள் உள்பட 20 பேர் கைது
சேலம் அருகே ஆயுதம் தயாரிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது: நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்