சாலையில் பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு அடி
2022-01-27@ 01:01:46

பெரம்பூர்: அயனாவரம் பொன்வேல்புரம் 5வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (47). இவரது வீட்டின் முன் நேற்று முன்தினம் இரவு வாலிபர்கள் குடிபோதையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை சிவகுமாரின் மனைவி தட்டிக்கேட்டார். அப்போது வாலிபர்கள் அவரிடம் ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட சிவகுமாரை அவர்கள் அடித்து கீழே தள்ளி கல்லால் கடுமையாக தாக்கினர். இதில் சிவகுமாரின் பின் தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. இதை கண்ட சிவகுமாரின் மகன் கவுதம் (19) அவர்களை தடுக்க வந்தபோது அவரையும் மூக்கில் தாக்கினர். அப்பகுதி மக்கள் வாலிபர்களை பிடித்து அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அயனாவரம் யுவராஜ் (23), அஜித் ராஜா (23), அப்பு (22) உள்ளிட்ட 7 பேர் என தெரியவந்தது. யுவராஜின் பிறந்த நாளுக்காக கேக் வெட்டியது தெரியவந்தது. அவர்களிடம் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
க்ரைம் நியூஸ்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் முதியவரிடம் ரூ1.30 லட்சம் அபேஸ்: போலீசார் மீட்டனர்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்