குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு
2022-01-25@ 19:04:26

திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் குப்பையை எரிப்பதால் விபத்து அபாயம் நிலவுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளன. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் திரையரங்குகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சில மாதங்களாக இந்த பகுதியில் சேரும் குப்பைகளை திரையரங்கின் அருகில் துப்புரவு பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். பின்னர் குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சாலையில் படரும் புகையால் விபத்து அபாயமும் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு சுவாச பிரச்னைகள் ஏற்படும் அவலம் நிலவுகிறது. பொதுமக்கள் நலன் கருதி, குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா கமலாலய குளத்தில் தொடங்கியது
காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி
அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் பறிமுதல்: தமிழகம், கேரளாவை சேர்ந்த 20 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே சிங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை: இன்று துவங்கியது
மதியநல்லூரில் ஜல்லிக்கட்டு 800 காளைகள் பங்கேற்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்