உம்மன்சாண்டிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு அச்சுதானந்தன் ரூ.10.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவு
2022-01-25@ 01:11:21

திருவனந்தபுரம்: கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து சரிதா நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். உம்மன்சாண்டி முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இருந்த பலருடன் இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
உம்மன்சாண்டி கலந்து கொண்ட பல அரசு நிகழ்ச்சிகளிலும் சரிதா நாயர் கலந்து கொண்டார். பின்னர் மோசடி புகாரில் இவர் கைது செய்யப்பட்டபோது, உம்மன் சாண்டிக்கும் சோலார் பேனல் மோசடியில் தொடர்பு இருப்பதாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, உம்மன்சாண்டி ஒரு சோலார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அவர் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அச்சுதானந்தனுக்கு எதிராக உம்மன்சாண்டி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருவனந்தபுரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உம்மன்சாண்டிக்கு. அச்சுதானந்தன் ₹ 10,10,000 நஷ்டஈடு வழங்க நேற்று உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது
அடுத்த 20,30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்
இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தை: அறுவை சிகிச்சையில் ஆச்சரியம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!