தங்கம் விலையில் மாற்றம்: நகை வாங்குவோர் அதிர்ச்சி
2022-01-25@ 00:11:57

சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் குறைந்து, மாலையில் மீண்டும் அதிகரித்தது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை 18ம் தேதி ஒரு சவரன் ரூ.36,320க்கும், 19ம் தேதி சவரன் ரூ.36,376, 20ம் தேதி சவரன் ரூ.36,704 என்று விலை உயர்ந்தது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.408 அதிகரித்தது. 21ம் தேதி சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.36,576க்கும் விற்கப்பட்டது. மறுநாள்(22ம் தேதி) தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,588க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,704க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.4,583க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.36,664க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, கடந்த சனிக்கிழமை விலையைவிட கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,605க்கும், சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,840க்கும் விற்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 5 நாட்களில் சவரனுக்கு ரூ. 736 உயர்ந்து ரூ.38,648க்கு விற்பனை!! ..
மே-23: பெட்ரோல் விலை ரூ.102.63 , டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
45 நாட்களுக்கு பிறகு விலையில் மாற்றம் பெட்ரோல் ரூ.8.22 டீசல் ரூ.6.70 குறைந்தது: சென்னையில் ரூ.102.63, ரூ.94.24க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.38,536-க்கு விற்பனை
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 624 உயர்ந்து ரூ.38,536க்கு விற்பனை!!
ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ304 உயர்ந்தது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்