முழு ஊரடங்கு காரணமாக மாநில எல்லை வரை இயங்கிய ஆந்திர பஸ்கள்: தமிழகத்திற்கு நடந்து வந்த பயணிகள்
2022-01-24@ 21:01:25

வேலூர்: உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநில எல்லை சோதனை சாவடிகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் என பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். இருப்பினும் சித்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வேலூருக்கு வந்த தனியார் பஸ்கள் காட்பாடி எல்லை வரை இயக்கப்பட்டது. சிறிது தொலைவு தூரம் நடந்து வந்த பயணிகள் தமிழக எல்லையில் இருந்த ஆட்டோக்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் பயண சீட்டுகளை வைத்து கொண்டு பயணம் செய்தவர்களை அனுமதித்தனர். சில பயணிகள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததால் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டனர். ஆட்டோக்கள் போதுமான அளவு இல்லாததால் பெரும்பாலான பயணிகள் குழந்தைகளுடனும் நடந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி 4ம் ஆண்டு நினைவு தினத்தில் பொதுமக்கள் அஞ்சலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்