முழு ஊரடங்கு காரணமாக மாநில எல்லை வரை இயங்கிய ஆந்திர பஸ்கள்: தமிழகத்திற்கு நடந்து வந்த பயணிகள்
2022-01-24@ 21:01:25

வேலூர்: உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநில எல்லை சோதனை சாவடிகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் என பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். இருப்பினும் சித்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வேலூருக்கு வந்த தனியார் பஸ்கள் காட்பாடி எல்லை வரை இயக்கப்பட்டது. சிறிது தொலைவு தூரம் நடந்து வந்த பயணிகள் தமிழக எல்லையில் இருந்த ஆட்டோக்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் பயண சீட்டுகளை வைத்து கொண்டு பயணம் செய்தவர்களை அனுமதித்தனர். சில பயணிகள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததால் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டனர். ஆட்டோக்கள் போதுமான அளவு இல்லாததால் பெரும்பாலான பயணிகள் குழந்தைகளுடனும் நடந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!