குருவாயூர் கோயிலில் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாட்டிலும் 145 திருமணம்
2022-01-24@ 20:55:41

திருவனந்தபுரம்: கேரளாவில் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் நேற்று விதிக்கப்பட்ட போதிலும் குருவாயூர் கோயிலில் 145 திருமணங்கள் நடந்தன. கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியபடி இருந்தது. இந்த நிலையில் நேற்றும் தொடர்ந்து 4வது நாளாக நோயாளிகள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து உள்ளது. நேற்று 45,449 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தொற்று சதவீம் 44.88 ஆகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்தது.
கேரளாவில் ஒரு மாவட்டத்தில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடப்பது இதுவே முதல்முறையாகும். இதனிடையே மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து நேற்று முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து சாலைகள் முழுவதும் வெறிச்சோடின. நீண்ட தூர பஸ்கள் மட்டும் ஓரளவு ஓடின. ஆட்டோ, டாக்சி உள்பட பெரும்பாலான வாகனங்கள் ஓடவில்லை. மாநிலம் முழுவதும் காய்கறி, இறைச்சி, மீன் உள்பட அத்தியாவசியக கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.
பொது மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகளை மீறியதாக 262 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 170 பேர் கைது செய்யப்பட்டனர். 134 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, இந்த நிலையில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் நேற்று 162 திருமணங்கள் நடத்த முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் ஒரு திருமணத்திற்கு அதிகபட்சமாக 10 பேரும், 2 போட்டோ கிராபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று அதிகாலை 5 மணி முதல் கோயில் வளாகத்தில் உள்ள 2 மண்டபங்களில் திருமணங்கள் நடக்க தொடங்கின. சிறிது நேரத்தில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால் மேலும் ஒரு மண்டபத்தில் வைத்து திருமணங்கள் நடத்தப்பட்டன. அந்தவகையில் நேற்று மொத்தம் 145 திருமணங்கள் நடந்தன. மீதமுள்ள 17 திருமணங்கள் நடைபெறவில்லை.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது
அடுத்த 20,30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்
இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தை: அறுவை சிகிச்சையில் ஆச்சரியம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!