பின்னலூர் கிராமத்தில் குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்: வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
2022-01-24@ 20:46:50

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் ஊராட்சி, புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 2000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் இக்கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், அரிசி, பருப்பு வகைகள் மற்றும் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை எடுத்து சென்றுவிடுகின்றது. அதனை குடியிருப்புவாசிகள் பிடுங்க முயலும்போது துரத்தி கடிக்க முயல்கின்றது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சமடைந்து வருகின்றனர்.
குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அப்பகுதி வாசிகள் இதுகுறித்து கூறுகையில், கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாகவும், வீட்டில் எந்த பொருட்களையும் வைத்திருக்க முடியவில்லை. குடிநீர் டேங்கின் மீது ஏறி குடிநீரையும் அசுத்தம் செய்து வருகிறது என வேதனையுடன் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் வனத்துறை மூலம் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதிகளில் விட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
இனி பெட்ரோல் கவலை இல்லை!: பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் : பழனி மாணவரின் அசாத்திய கண்டுபிடிப்பு.!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்