திருப்பூர் அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: கருப்புகொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
2022-01-24@ 20:42:25

திருப்பூர்: திருப்பூர் அவினாசி ரோடு அம்மாபாளையம் அருகே உள்ள கானக்காடு பகுதியில் தனியார் பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு குப்பை கொட்டுவதால், பாறைக்குழியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், இங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாறைக்குழியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்மாபாளையம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
இனி பெட்ரோல் கவலை இல்லை!: பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் : பழனி மாணவரின் அசாத்திய கண்டுபிடிப்பு.!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்